பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
நகரி: ஆடி பவுர்ணமி நாளான ஆக., 2ம் தேதி, 10 ஆயிரம் கோவில்களில், நமது கோவில் என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் பாபிராஜு தெரிவித்தார்.ஆந்திராவில் பவுர்ணமி அன்று வெங்கடேச பெருமாள் பிறந்த திருவோண நட்சத்திர தினத்தில், "நமது கோவில் நிகழ்ச்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள பெருமாள் கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனவும் அவர் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.கோவில்களில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு வழங்க, 75 லட்சம் கங்கணக் கயிறுகளை, திருமலை கோவிலில் மூலவரான வெங்கடேச பெருமாளின் திருப்பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.பின்னர் கங்கணக் கயிறுகள் கொண்ட தட்டை, தேவஸ்தான சேர்மன் தலை மீது சுமந்தபடி, திருமலையில் மாடவீதியில் நடந்த புஷ்ப பல்லக்கு சேவையின் போது வந்தார். இந்த நிகழ்ச்சியில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் சுப்பிரமணியம், சீனிவாச ராஜு உட்பட அர்ச்சகர்கள் பலரும் கலந்து கொண்டனர். கங்கணக் கயிறுகளை அனைத்து கோவில்களுக்கும் அனுப்ப, திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.