இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 231 வது உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2022 07:04
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் நாளை 10.04.22 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் உழவாரப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறது. தொடர்ந்து பண்ணிரு திருமுறை பாராயணம் பாடி கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: எஸ். கணேசன் 9840 123 866 நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்