திருப்பரங்குன்றத்தில் ராம நவமி விழா : சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2022 03:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஏப். 4ல் துவங்கிய ராம நவமி விழாவில் தினம் சிறப்பு அபிஷேகம் பூஜை, ஆன்மிக சொற்பொழிவுகள், பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. காலை சாதுக்கள், சான்றோர்கள், பக்தர்கள் பங்கேற்ற ஸ்ரீ ராம நாம ஜெபம் நடந்தது. மஹா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்துப்படியானது. ராஜாங்க அலங்காரத்தில் உற்சவர் ராமர், சீதை லட்சுமணர், ஆஞ்சநேயருடன் அருள்பாலித்தார். திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் யாகசாலை பூஜை முடிந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. மூலவர்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.