வடமதுரை: ராமநவமியை முன்னிட்டு வடமதுரை பஜனை மடத்தில் இருந்து ராமர் பட ரத ஊர்வலம் புறப்பட்டு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்றது. பின்னர் நான்கு ரத வீதிகள் வழியே வலம் வந்த ஊர்வலம் திருச்சி ரோடு ராமதூது பக்த ஆஞ்சநேயர் கோயிலை வந்தடைந்தது. இங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.