தளவாய்புரம் : ராஜபாளையம் அடுத்த சேத்துார் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழி விழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி பொங்கல் திருவிழா ஏப். 2 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் திருவீதி உலா நடந்தது.நேற்று காலை கோயில் முன்பு உள்ள பூக்குழி திடலில் அக்னி வார்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் அம்மன் வீதி உலாவிற்கு பின் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.