முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. இதனையொட்டி பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.இந்நிலையில் பிள்ளையார் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம்,காவடி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். பின்பு மூலவரான முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் ,சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இரவு 8 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. கிராமமக்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராமமக்கள் கலந்து கொண்டனர்.