திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தனி சன்னதியில் தெர்ப்பசயன ராமர் உள்ளார்.
ராம நவமியை முன்னிட்டு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தெர்ப்பசயன ராமருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. கோயில் ஸ்தானீக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டு சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. நேற்று காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.