பழநி: பழநியில் பங்குனி மாதத்தை முன்னிட்டு தீர்த்த காவடி பக்தர்கள் அதிகரித்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பழநியில் பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து பழநி மலைக்கோயிலில் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொது தரிசனத்தில் பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஜவகர் வீதி, அருள்ஜோதி வீதியில் யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குளத்துரோடு, ஜவகர் வீதி, அருள்ஜோதி வீதி பகுதிகளில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சரவண பொய்கை முடி எடுக்கும் நிலையத்தில் பத்தர்களின் கூட்டம் காலையில் அதிகரித்திருந்தது.