வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2022 10:04
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு சித்திரை திருவிழாவிற்காக உற்சவருக்கு இன்று அதிகாலை பதினொரு வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் போலீஸ் முன்பு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து அர்ச்சகர் கோபி மாதவன் மூலவர் சுந்தரராஜ பெருமாள் என்னும் வீர அழகருக்கும் உற்சவருக்கும் கையில் காப்பை கட்டினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை ஏப்.15ம் தேதியும், அழகர் ஆற்றில் இறங்குதல் ஏப்.16ம் தேதியும்,நிலாச்சோறு நிகழ்ச்சி ஏப். 17ம் தேதியும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபி மாதவன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.