பதிவு செய்த நாள்
12
ஏப்
2022
10:04
திருத்தணி, : திரவுபதியம்மன் கோவிலில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி, காந்தி நகர், திரவுபதியம்மன் கோவிலில், தீ மிதி விழா, கடந்த மாதம், 24ம் தேதி துவங்கி, நேற்று பகல் 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவடைந்தது.
இந்த விழாவில், திருத்தணி, தரணிவராகபுரம், முருக்கம்பட்டு, காசிநாதபுரம், வேலஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, நேற்று முன்தினம் இரவு அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.அதை தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருத்தணி நகரம் முழுதும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று காலையில், தர்மர்பட்டாபிஷேகத்துடன் இந்தாண்டிற்கான தீ மிதி விழா நிறைவடைந்தது.