ராஜகாளியம்மன், மதுரை வீரன் கோவிலில் பக்தர்கள் பால்குடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2022 12:04
மேலூர்: மேலுார், சந்தப்பேட்டை வ.உ.சி., நகரில் வீரகாளியம்மன், ராஜகாளியம்மன், மதுரை வீரன் கோயில் பங்குனி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு பாலாபிேஷகமும், விளக்கு பூஜையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஏப்.12) முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.