பதிவு செய்த நாள்
12
ஏப்
2022
12:04
உத்திரமேரூர் : உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.உத்திரமேரூரில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா, கோவிலில் நேற்று துவங்கியது.
காலை 6:30 மணிக்கு கொடியேற்றத்தை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, பஜார் வீதி வழியாக வலம் வந்த சுவாமியை, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். வீதியுலா முடிந்து காலை 11:00 மணிக்கு கோவிலை அடைந்தார்.