பரமக்குடியில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது சித்திரைத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2022 02:04
பரமக்குடி: பரமக்குடியில் சித்திரை திருவிழா நேற்று சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், மதுரை அழகர் கோவிலைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் திருவிழா கோயில் வளாகத்தில் நடந்தது. இந்த ஆண்டுக்கான விழாவில், நேற்று காலை 9:45 மணிக்கு மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாள், யாக மூர்த்தி மற்றும் பரிவாரங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் தீர்த்த குடங்கள் யாக சாலையை அடைந்தனர். தினமும் காலை, மாலை யாக பூஜைகள் நடந்து, ஏப்., 15 காலை கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. அன்று இன்று இரவு 2:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். ஏப்., 16 காலை 9:00 மணிக்கு கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீச்சி அடிப்பர். ஏப்., 17 இரவு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளும் சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.