பாலக்காடு: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் புகழ்பெற்ற ஆலத்தியூர் ஹனுமன் கோவிலில் ஏழுநாள் நீண்டு நிற்கும் பாகவத சப்தாஹ நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளன. யஞ்ஞாச்சாரியர் கண்டமங்கலம் நந்தகுமார் நம்புவது என் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியை கடந்த தினம் கோவில் தந்திரி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் மேல்சாந்தி அரீக்கரை சங்கரன் நம்பூதிரி, நிர்வாக அதிகாரி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடந்து கலவறை நிறைப்பு, ஆச்சாரிய வரணம், மாஹாத்மிய பாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடர் நாட்களில் காலை வேதஜபம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், பாகவதார்ச்சனை ஆகிய பூஜைகள் நடைபெறும். நேற்று மாலை 5 சர்வ ஐஸ்வர்யா பூஜை நடந்தன. 14ம் தேதி ருக்மணி ஸ்வயம்வர பெருவிழாவும் 15ம் தேதி காலை 8 மணிக்கு வித்யாகோபாலார்ச்சனையும் மாலை 6 மணிக்கு சந்தானகோபாலார்ச்சனையும் நடக்கின்றன. 16ம் தேதி ஹனுமன் ஜயந்தி திருவிழா நடக்கின்றன.