பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் வீதி வலம் வந்தார்.
இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 5 கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் சுவாமி பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் தனித்தனி வாகனங்களில் பஞ்சமூர்த்திகளாக வலம் வருகின்றனர். இன்று திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சியும், 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடக்க உள்ளது. தொடர்ந்து ஏப்., 15 சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கும்.