சோழவந்தான்: சோழவந்தான் பூமேட்டு தெரு உச்சிமாகாளியம்மன், வடகத்தி காளியம்மன் கோயில் உற்சவ விழா ஏப்., 5ல் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏப்.,8 திருவிளக்கு பூஜையை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தொழிலதிபர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் மருதுபாண்டியன் வள்ளிமயில் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.