மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் கீழமடவளாகத்தில் உள்ள சியாமளா தேவி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் கீழ மடவிளாகத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ சியாமளா தேவி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது, இதனை தொடர்ந்து நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்று இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜையும் இதனைத் தொடர்ந்து மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து யாகசாலையில் வைத்து வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மலர்தூவி கோவிலை சுற்றி எடுத்துச் சென்று விமான கலசத்தை அடைந்தனர், இதனைத் தொடர்ந்து விமான கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது,பின்னர் சியாமளா தேவி அம்மனுக்கும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.இந்த கும்பாபிஷேகத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.