வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை வருடப்பிறப்பு, பிரதோஷம், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை ஏப்ரல் 16 முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை ஏற அனுமதிக்கப் படுவது வழக்கம். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை ஏப். 14 காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை என் ஏப்.17 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இருந்த போதிலும் மழை பெய்தால் அப்போதைய சூழ்நிலையை பொருத்தே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து தெரிவித்தார்.