பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று பெருமாளுக்கு யாகசாலை முன்பு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இக்கோயிலில் கோடை திருநாளும் சித்திரைத் திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது தினமும் பெருமாள் காலை, மாலை யாக சாலை முன்பு சர்வ அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து ஏப்., 15 காலை யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி அன்று பெருமாள் மற்றும் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. அன்று இரவு 2:00 மணிக்கு பெருமாள் ஆயிரக்கணக்கான தீவர்த்திகள் வெளிச்சத்தில் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.