மானாமதுரை சித்திரை திருவிழாவில் சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2022 03:04
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாத கோவில் சித்திரைத் திருவிழாவில் சமணர்கள் கழுவேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.தினந்தோறும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.6ம் நாள் மண்டகப்படியான நேற்று இரவு அம்மனும்,சுவாமியும் ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள கழுவேற்றும் பொட்டலில் திருஞானசம்பந்தர் அவதாரம் குறித்த சொற்பொழிவு நடந்த பின்னர் கழுமரத்தில் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் சமணர்களின் மணல் சிற்பங்களுக்கு மல்லிகை பூக்களை செலுத்தி வணங்கி சென்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை காலை 11:00 மணியிலிருந்து 11.30 மணிக்குள் நடைபெற உள்ளது.நாளை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.