அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, திருநகரம் சாலியர் மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட, ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில், பங்குனி பொங்கல் விழா நடந்து வருகிறது. 9 ம் நாள் விழாவாக நேற்று பக்தர்கள் தனி தனியாக அக்னி சட்டி எடுத்தும், 51, 101 சட்டிகள் ஏந்தி விரதமிருந்து ஊர்வலமாக சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை பூப்பல்லக்கில் அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.