விழுப்புரம்: விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருவிழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 19ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை மங்கள இசையும் நடந்தது. தொடர்ந்து 20ம் தேதி காலை 8 மணிக்கு காப்பு கட்டி கரகம் வீதியுலாவும், பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.