பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
கோட்டயம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளத்தில் உள்ள நெல்லிக்காட்டு பகவதி கோயிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு நோய் தீர்க்கும் கூட்டுபிரார்த்தனை, மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கேரளாவில், மலையாள மாதமான கர்க்கடக மாதம்(ஆடி) "ஆன்மிக மாதமாக கொண்டாடப்படுகிறது. அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பொங்கலிடுதல், திருவிளக்கு வழிபாடுகள் நடக்கும். கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ., தூரத்தில், அங்கமாலி செல்லும் ரோட்டில் உள்ள கூத்தாட்டுகுளம் பகவதி கோயிலில், ஆடி மாத சிறப்பு பூஜை, என்.பி.நாராயணன் நம்பூதிரி தலைமையில், தினமும் நடக்கிறது. பூர்வ ஜென்ம தோஷம் நீங்கவும், நோய்கள் தீரவும் இங்கு பக்தர்களுக்கு, அம்மன் முன்பு பூஜித்த "மருந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. அம்மன் சன்னதியில் கூட்டு பிரார்த்தனையை டாக்டர் என்.பி.பி.நம்பூதிரி துவக்கி வைத்தார். நிர்வாகி ஹரி நம்பூதிரி முன்னிலை வகித்தார். பூஜை தொடர்பான விபரங்கள் அறிய 094478 75067.