காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா மிகசிறப்பாக நடைபெற்றது.
காரைக்கால் தருமபுரம் பகுதியில் உள்ள திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீதேனாமிர்தவல்லி சமேத ஸ்ரீ யாழ்முரிநாத கோவிலில் விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி, அம்பாள் உள்ளிட்ட நவக்கிரகங்கள் உள்ளது.இதனால் மிகப்பழமையான கோவிலில் பல்வேறு பகுதியிலிருந்து தினம் பக்தர்கள் யாழ்முரிநாதரை தரிசனம் செய்ய வருகின்றனர். இன்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை பல்வேறு திரவங்களால் அபிேஷகம் ஆராதனை நடைபெற்றது.பின்னர் குரு பகவான் தெட்சிணா மூர்த்தி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கும் போது மகா தீபாரனை நடைபெற்றது. பின்னர் குருபகவானுக்கு வெள்ளிகவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதுப்போல் பூவம் சித்திநாத சுவாமி,மேலகாசாகுடி நாகநாதசுவாமி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் குருப்பெயர்ச்சி மிகவிமர்ச்சியாக நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவானை தரினம் செய்தனர்.