நாளை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு ஆண்டாள் மாலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2022 08:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு சூட்ட, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்கல பொருட்கள் நேற்று மதுரை கொண்டு செல்லப்பட்டது.
இதனை முன்னிட்டு நேற்று மதியம் 3:00 மணிக்கு கோயில் வெள்ளிக்கிழமைகுறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளை ரகுராம பட்டர் செய்தார். வேதபிரான் சுதர்சன், அரையர் முகுந்தன் வேத விண்ணப்பம் செய்தனர். பின்னர் மாலை, கிளி, பட்டு மற்றும் மங்கலப்பொருட்கள் ஒரு கூடையில் வைத்து ஸ்தானிகம் ஹயக்ரீவஸ் தலைமையில், கோயில் மாடவீதி சுற்றி வந்து காரில் வைத்து மதுரை கொண்டு செல்லப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோவில் பட்டர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தல்லாகுளம் வரை உள்ள பல்வேறு மண்டபங்களில் ஆண்டாள் மாலைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் இன்று (ஏப்.15) இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை மாலை சென்றடைகிறது. நாளை (ஏப்.16) அதிகாலை கள்ளழகர், ஆண்டாள் சூடிக்களைந்த மாலை அணிந்து ஆற்றில் இறங்குகிறார்.