திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி அகழர்பெருமான் பக்தர்களின் கோவிந்தா கோஷத்தின் இடையே இறங்கினார். திருப்புவனம் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 124 வது சித்திரை பெருவிழா 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் இருந்து பச்சை பட்டு உடுத்தி தங்க நிற குதிரையில் கிளம்பிய அழகர் பெருமான் காலை 8.30 மணிக்கு வைகை ஆற்றில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்தின் இடையே இறங்கினார். விரதமிருந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து நேர்த்தி கடன் செலுத்தினர். நான்கு ரத வீதிகளையும் வலம் வந்த அழகர் பெருமானுக்கு பக்தர்கள் சர்க்கரை தீபமேற்றி வழிபட்டனர். பல்வேறு சமுதாயத்தினர் மண்டகப்படியில் எழுந்தருளும் அழகர் இன்று வீரபத்திர சாமி கோயிலில் தங்கியபின் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவர் இளைஞர் பேரவை, யாதவர் பண்பாட்டு கழகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.