சிவகாசி: திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா 11 நாட்களாக நடந்து வருகிறது . தினமும் இரவு வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. 5 நாட்களுக்கு முன் பொங்கல் விழா நடந்தது. 3 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.