திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி மற்றும் தமிழ் வருட பிறப்பு விழா நடந்தது.
வருட பிறப்புடன் குரு பெயர்ச்சி சேர்ந்து வந்ததால், திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தொடர்ந்து குருதட்சணாமூர்த்தி மற்றும் நவகிரக குருபகவானுக்கு அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு நந்திகேஸ்வரர் மற்றும் வீரட்டானேஸ்வரர் ஒரு சேர பிரதோஷ மகாதீபாராதனையும் தொடர்ந்து, ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரன் வீதி புறப்பாடு, இரவு 8:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலை முதல் இரவு வரை சுவாமி தரிசனம் செய்தனர்.