பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2022 07:04
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் நடந்தது. சங்க இலக்கிய புகழ்பெற்ற இக்கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் மண்டகப்படியாக நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் திருக்கல்யாணம் நடந்தது.
ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 5:00 மணிக்கு பிரியாவிடையுடன் திருக்கொடுங்குன்றநாதர் பெரிய தேரிலும், குயிலமுதாம்பிகை அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். காலை 6:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். நான்கு ரத வீதி வழியாக தேர்கள் வலம் வந்தது மாலை 6:20 க்கு விநாயகர் தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து ஒவ்வொரு தேராக இழுக்கப்பட்டு நிலையை அடைந்தது. தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் சிவ சிவ கோஷம் முழங்கி வழிபட்டனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடந்ததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.