கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தேர் வடிவமைக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2012 10:07
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி தேர் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் அவதார மகிமைகளை விளக்கி பல விதமான வடிவங்களில் நாள்தோறும் இரவில் வீதியுலா ற்சவம் நடந்து வருகிறது. முத்து மாரியம்மன் சனி பகவானுக்கு முத்து அளித்து விரட்டும் வரலாறு நிகழ்ச்சியினை பக்தர்கள் வேடமிட்டு நிகழ்த்தி காட்டினர். காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாணம் ற்சவம் 21ம் தேதி நடந்தது. இன்று (24ம் தேதி) காத்தவராயன் சின்னான் மோடி எடுத்தல் நிகழ்ச்சியும், நாளை 25ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. தேர் திருவிழாவையொட்டி தேரை வடிவமைக்கும் பணி இரண்டு நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.