Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுட்டெரிக்கும் வெயில் : ... அய்யம்பாளையத்தில் ஆற்றில் இறங்கிய அழகர் அய்யம்பாளையத்தில் ஆற்றில் இறங்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பவுர்ணமி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பவுர்ணமி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2022
02:04

தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை மட்டுமே, பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். இந்தாண்டு, கடந்த, பிப்., 28ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி தினத்தன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி, ஈசனை வழிபடுவது வழக்கம். இந்தாண்டும், நேற்று முன்தினம் இரவு முதலே, ஏராளமான பக்தர்கள், மலை ஏற வந்தனர். நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.

சித்ரா பவுர்ணமி தினமான நேற்று காலை, 6:00 மணி முதல் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். சித்ரா பவுர்ணமியையொட்டி, பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மை, கிரி மலையிலுள்ள சுயம்பு வடிவிலான ஈசனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சித்ரா பவுர்ணமியையொட்டி, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து சுவாமியை தரிசித்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வனத்துறை சோதனைச்சாவடி அருகே பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பார்க்கிங் பகுதியில் இருந்து கோவில் அடிவாரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது, வெயில், மழை என, காலநிலை அடிக்கடி மாறி வருவதால், மழை பெய்யும் போது பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar