ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி சாலை இசக்கியம்மன் கோயில் கொடைவிழா இன்று (24ம் தேதி) கால்நாட்டுதலுடன் துவங்குகிறது. ஆழ்வார்குறிச்சியில் தென்காசி-அம்பை மெயின்ரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சாலை இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கொடை திருவிழா கால்நாட்டுதல் வைபவம் இன்று (24ம் தேதி) மதியம் 12 மணிக்கு நடக்கிறது. இதனை தொடர்ந்து வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு தெப்பக்குளத்திலிருந்து மேளதாளங்களுடன் தீர்த்தம் எடுத்து வருதலும், இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகமும், இரவு 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடக்கிறது. 31ம் தேதி காலை 8 மணிக்கு பால்குடம், 10 மணிக்கு உருவம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை, பின்னர் திருமலையப்பபுரம் அரிஹரன் சார்பில் அன்னதானம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது. விழாவில் வாகைக்குளம் இந்திரா இன்னிசை குழுவினரின் சிறப்பு வில்லிசையும், ஆழ்வார்குறிச்சி பெருமாள் குழுவினரின் நையாண்டி மேள கச்சேரியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கொடை விழாக் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.