Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்காமீஸ்வரர் கோவில் ... பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-5: பேச்சிலும் உபசரிப்பிலும் கனிவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2012
10:07

கனிவான பேச்சையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்புகிறார்கள். ஒருசமயம், ஒருவர் நபிகளாரைக் காண காத்து நின்றார். இதுபற்றி, நாயகம்(ஸல்) அவர்களிடம் தகவல் சொல்லப்பட்ட போது, அவன் நல்லவன்இல்லை, இருந்தாலும் அவனை உள்ளே வரச்சொல்லுங்கள், என்றார்கள். அந்த மனிதரிடமும் பரிவுடன் பேசினார்கள். அந்த மனிதர் சென்ற பிறகு, நாயகம்(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா நாயகி அவர்கள், ""அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது? என்று கேட்டார்கள்.அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள் இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான், என்று பதிலளித்தார்கள்.

இன்னொரு சம்பவத்தையும் உதாரணம் காட்டலாம்.ஒருசமயம் நாயகம்(ஸல்) அவர்கள், தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் அவரைக் காண வந்தார். உடனே நாயகம் அவர்கள், தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து விட்டு, அதில் அவரை அமரச்செய்தார்கள். பின்னர் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்து அமரச் செய்தார்கள். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, நாயகம் அவர்கள் எழுந்து கொண்டு, அவர்களுக்கு விரிப்பைக் கொடுத்தார்கள். இதில் இருந்து அவர்களது கனிவான உபசரிப்பை உணரலாம். நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் எல்லாரிடமும் கனிவைக் காட்டுவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50.
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar