Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழப்பாளையம் திரௌபதி அம்மன் ... இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்கும் கல்வி தொழிலுக்கானது மட்டுமல்ல காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை
எழுத்தின் அளவு:
கற்கும் கல்வி தொழிலுக்கானது மட்டுமல்ல காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை

பதிவு செய்த நாள்

24 ஏப்
2022
02:04

பல்லடம்: நாம் கற்கும் கல்வி தொழிலுக்கான அதுமட்டுமல்ல. நல்ல பண்புகளை வளர்க்கவும் அவசியமாகும் என, காமாட்சிபுரி ஆதீனம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பல்லடம் அடுத்த, அருள்புரம் ஜெயந்தி பள்ளி மாணவ மாணவியர், தேர்வில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சித்தம்பலம் நவகிரக கோட்டையில், மாணவ மாணவியருக்கு சிறப்பு  வேள்வி வழிபாடு நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று பேசியதாவது, மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும், போற்ற வேண்டும், வணங்க வேண்டும் என்ற  எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். கல்வியறிவு மட்டுமன்றி தெய்வ பக்தியும் மிகுந்து இருக்க வேண்டும். யாரிடம் தெய்வபக்தி அதிகம் உள்ளதோ அவர்கள் தாய்தந்தையரை  மதிப்பவராகவும், தெய்வ பக்தியில் சிறந்தும் இருப்பர்.‌ இளமையில் கல் என்று கூறுவர். இளமை காலத்தில் நல்லவர்களோடு பழகி, நல்ல விஷயங்களை கேட்டு, நல்ல பண்புகளை வளர்துது வீட்டுக்கும்  நாட்டுக்கும் உரியவர்களாக நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கற்கும் கல்வி தொழிலுக்கானது மட்டுமல்ல. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் கல்வி அவசியம்‌ என்றார். முன்னதாக,  பள்ளி மாணவ மாணவியர், நவகிரகங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து, தேர்வால் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்த மாணவர்களுக்கு, காமாட்சிபுரி ஆதீனம் பேனா வழங்கி ஆசி  தெரிவித்தார். பள்ளி தாளாளர் கிருஷ்ணன், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar