பதிவு செய்த நாள்
25
ஏப்
2022
08:04
சென்னை: சென்னை மாங்காடு அருகே உள்ள குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா வரும் 20ம்தேதி தொடங்கியது. அன்று விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜை ஆகியவை நடக்கிறது. 21ம் தேதி நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சோம கும்ப பூஜை நடைபெற்றது. 22ம் தேதி மகாலட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பரிவார பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, 23ம் தேதி 2ம் கால யாகசாலை பூஜை, 3ம் கால யாகசாலை பூஜை ஹோமம் , 24ம் தேதி 4ம் கால யாகசாலை பூஜை, விசேஷ தீபாராதனை, 5ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இன்று 25ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மேல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகம், உற்சவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் , வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நமது தினமலர் இனையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.