கன்னியாபுரம் காளியம்மன் கோவில் விழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2022 08:04
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் காளியம்மன், மாரியம்மன் கோவில் உற்சவ விழா நடந்தது.
விழாவில் முன்னதாக ஏப்ரல் 15 தீர்த்தம் அழைத்தல் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு மற்றும் தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். பின் விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதலுடன், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மேளதாளம் முழங்க, வாண வேடிக்கை, வர்ணக் குடை மற்றும் முளைப்பாரி உடன் அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சந்தான வர்தினி ஆற்றில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.