Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயங்களில் 16 வகை திரவியங்கள் ... முத்துமாரியம்மன் கோவில் சித்திரை வசந்த திருவிழா முத்துமாரியம்மன் கோவில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி

பதிவு செய்த நாள்

25 ஏப்
2022
12:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிக்கான உத்தரவு ஒப்பந்ததாரர் திருப்பூர் வேல்முருகனுக்கு வழங்கப்பட்டது. விரைவில் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளார்.

இக்கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தில் 2018 பிப்.,2ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. நான்கு ஆண்டுகளான நிலையில் இன்னும் சீரமைப்பு பணிகள் தொடங்கவில்லை. சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யாமல் இருந்ததே காரணம்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள களரம்பள்ளி மலையடிவாரத்தில் கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடியும், மண்டப வடிவமைப்புக்கு ரூ.11.70 கோடியும் அரசு நிதி ஒதுக்கியது. கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மதுரையில் கோயில் இடமான செங்குளத்தில் வைக்கப்பட்டன. சமீபத்தில் திருப்பூர் வேல்முருகன் என்பவருக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது. இதற்கான பணி உத்தரவை கோயில் நிர்வாகம் நேற்றுமுன்தினம் அவருக்கு வழங்கியது. ஓரிரு நாளில் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளார். அடுத்தாண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.25 கோடியில் கும்பாபிேஷக திருப்பணி: இக்கோயில் கும்பாபிேஷகம் 2009 ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும் என்ற ஆகமவிதிப்படி கடந்தாண்டே நடத்தப்பட்டிருக்க வேண்டும். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் துவங்காததால் கும்பாபிேஷக திருப்பணிகளும் துவங்கப்படவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிேஷகம் நடத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதைதொடர்ந்து திருப்பணிகளுக்காக ரூ.25 கோடியில் மதிப்பீடு தயார் செய்து கோயில் நிர்வாகம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. திருப்பணிகள் மே 15க்குள் துவங்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar