Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிடந்தை கோவிலில் இன்று ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பொலிவுடன் பச்சையம்மன் கோவில்: கும்பாபிஷேக பணிகள் ’விறுவிறு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2022
03:04

உத்திரமேரூர்:சாத்தணஞ்சேரி பாலாற்றங்கரையோரம், புதுப்பொலிவுடன் பச்சையம்மன் கோவில் கட்டப்படுவதோடு, ஆஞ்சநேயர், பைரவர், தட்சணாமூர்த்தி என 16 சுவாமிகளுக்கு தனி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.உத்திரமேரூர் ஒன்றியம், பாலாற்றங்கரையோரம் சாத்தணஞ்சேரி உள்ளது. இக்கிராமத்தில் கன்னியம்மன் கோவில், விட்டில்ராஜ பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், விநாயகர் கோவில் என, திசைக்கு ஒன்றாக, ஊரைச் சுற்றி பல கோவில்கள் உள்ளன.அதிலும், பாலாற்றங்கரை மீதுள்ள பச்சையம்மன் கோவில், மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றது.

குழந்தையின்மை, திருமண வரம், மனநிலை பாதிப்பு, தீராத நோய் போன்ற பிரச்னைகளுக்கு, இக்கோவிலில் பிரார்த்தனை செய்தால் சிக்கல்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.சிறிய வடிவில் இருந்த பச்சையம்மன் கோவிலுக்கு, ராஜகோபுரத்தோடு மண்டபம் ஏற்படுத்தி, பல்வேறு சுவாமி சிலைகள் அமைத்து வழிபட, கிராம மக்கள் தீர்மானித்தனர்.அதன்படி, புதிதாக கருவறை கோபுரம், ராஜகோபுரம், மகா மண்டபம் என கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.கோவில் வளாகத்திற்குள்ளே விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் முருகன், சிவதுர்க்கை, முடியால் அழகி, பூங்குழலி, நாகத்தம்மன், பைரவர், ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி.சிவனுடன் பார்வதி, நவக்கிரகம், சப்த கன்னியர் என, காவல் தெய்வங்களாக சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தவிர ஏற்கனவே அமைக்கப்பட்ட மதுரை வீரன், ஜடாமுனி, வாழ்முனி, செம்முனி, கருமுனி, தவமுனி, சங்குமுனி, நாகமுனி ஆகிய சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.சாத்தணஞ்சேரி கிராமத்தினர் கூறியதாவது:கடந்த 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த பச்சையம்மன் கோவிலில் வழிபாடு செய்தால், நன்மைகள் வந்து சேரும் என முன்னோர் காலம் தொட்டு வழிபட்டு வருகிறோம்.தற்போது, ஆஞ்சநேயர், பைரவர் என, மேலும் பல சுவாமிகளுக்கு மண்டபம் ஏற்படுத்தி, புதுப்பொலிவுடன் இக்கோவில் எழுந்தருள உள்ளது.கோவில் திருப்பணிகள் முடிந்ததும், வரும் ஜூன் 3ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar