Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலாடி முத்தாலம்மன் கோயிலில் ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழா
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழா

பதிவு செய்த நாள்

26 ஏப்
2022
08:04

சென்னை, புதுப்பிக்கப்பட்ட காரப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழாவில், மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து, தீமிதி என, 25 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஓ.எம்.ஆர்., சாலை, காரப்பாக்கம் பகுதியில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக, அங்குள்ள கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன.சிறப்பு பூஜைபோதிய பராமரிப்பு இல்லாமல், பெரிய அளவில் விழாக்கள் எடுக்கவில்லை. ஆனால், தினமும் பூஜை நடைபெறும். காரப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், இந்த கோவிலுக்கு செல்கின்றனர். கடந்த, 2011ம் ஆண்டு, ஊர் மக்கள் ஒன்று கூடி, கோவில் கட்டி, போதிராஜா சிலையும், கொடி மரமும் அமைத்தனர். தினமும், திரவுபதியம்மனுக்கும், போதிராஜாவுக்கும் அபிஷேகம் செய்யப்படும்.ராகு கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, கோவிலின் வடக்கு பக்கம் நவகிரக சிலை, நாகராஜா - ராணி சிலைகள் உள்ளன. மாதந்தோறும், அமாவாசையின் போது சிறப்பு பூஜை நடைபெறும்.மகாபாரத சொற்பொழிவுஇந்நிலையில், கோவிலை புதுப்பித்து, முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழா நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 21ம் தேதி, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் விழாவில், மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நாடகம், தீமிதி உலா, படுகள காட்சி, திருமுடி புனைதல், தருமர் பட்டாபிஷேகம் என தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.தீமிதிக்கு, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். கோவில் அறங்காவலர் லியோ என்.சுந்தரம் தலைமையிலான ஊர் பொதுமக்கள், 25 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னின்று நடத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar