Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான பக்தவச்சல பெருமாள் தேர் ... வரதராஜ பெருமாள் கோயிலில் முத்துப் பல்லக்கில் சுவாமி வலம் வரதராஜ பெருமாள் கோயிலில் முத்துப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத் துறை அலுவலகத்தில் ரூ.15 கோடியில் கூடுதல் கட்டடம்
எழுத்தின் அளவு:
அறநிலையத் துறை அலுவலகத்தில் ரூ.15 கோடியில் கூடுதல் கட்டடம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2022
11:04

சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை தலைமையகத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளோடு, நான்கு தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டும் பணியை, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில், அறநிலையத் துறை தலைமையகம் அமைந்துள்ளது.

அதன் கட்டுப்பாட்டில், 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இயங்கி வருகின்றன. நான்கு கூடுதல் கமிஷனர்கள், 35 இணைக் கமிஷனர், 30 துணைக் கமிஷனர்கள், 77 உதவிக் கமிஷனர்கள், கண்காணிப்பு, செயற்பொறியாளர்கள், நகை சரிபார்ப்பு அலுவலர் என, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.தலைமையக அலுவலகத்தில் இடப் பற்றாக்குறையை போக்க, 15 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் கட்டம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கூடுதல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.புதியதாக அமைய உள்ள கூடுதல் கட்டடம், நவீன வசதிகளோடு, 40 ஆயிரம் சதுர அடியில் நான்கு தளங்களுடன் அமைய உள்ளது. பணி நியமன உத்தரவுகோவில்களில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிபவர்களை பணி வரன்முறை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக, 425 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரி உள்ளிட்ட 33 பேருக்கு, முதல்வர் ஸ்டாலின் பணி நியமன உத்தரவு வழங்கினார். நிகழ்ச்சியில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவுமார மடாதிபதி குமரகுருபர சுவாமிகள், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி., தயாநிதி மாறன், அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திமோகன், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜருக்கு, வெளிநாட்டு பக்தர், ரூ. 25லட்சம் மதிப்புள்ள நவரத்தின ஆபரணம் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar