திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயிலில் வசந்த விழா: பக்தர்கள் பால்குடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2022 10:04
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
இக்கோயிலில் ஏப்.,22ல் காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினசரி இரவில் உற்ஸவ அம்பாள் பல்வேறு வாகனங்களில் குளத்தை வலம் வருகிறார். நேற்று காலை 8:00 மணி அளவில் சோழிய வெள்ளாளர் இளைஞர் அணி சார்பில் பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் கோட்டைக்கருப்பர் கோயிலில் முன்னாள் தக்கார் ஆறு.தங்கவேலு முன்னிலையில் பால்குடம் எடுத்து நகரில் ஊர்வலமாக வந்தனர். கோயிலுக்கு வந்த பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து பாலாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். அலங்காரத் தீபாராதனையை பக்தர்கள் கூடி தரிசித்தனர். தொடர்ந்து ஏப்.,29 ல் அம்பாள் ஊஞ்சல் உற்ஸவம், ஏப்.,30ல் அம்மன் ரத ஊர்வலம், மே1 ல் தெப்பத்துடன் உற்ஸவம் நிறைவடைகிறது.