Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலுக்கு செல்ல ஆர்வம் குறைவு? ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் வஸ்திரம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
15ம் நுாற்றாண்டு நடுகல்: வாலாஜாபாதில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
15ம் நுாற்றாண்டு நடுகல்: வாலாஜாபாதில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

27 ஏப்
2022
11:04

வாலாஜாபாத்: விஜய நகர பேரரசு காலத்தைச் சேர்ந்த நடுகல் குறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் கூறியதாவது: வாலாஜாபாத், சேர்க்காடு துலுக்காணத்தம்மன் கோவில் வளாக்தில், 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர பேரரசரின் காலத்தைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த கல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தோரின் குல தெய்வ வழிபாடாக உள்ளது.

இச்சிலையில், வலது கையில் உள்ள கத்தியால், தன் தலையை தானே வெட்டிக்கொள்வது போல உருவம் உள்ளது. இடது கையில், கூர்மையான வாள் தரை நோக்கி உள்ளது.கொண்டை தலையும், கழுத்தில் ஆபரண மணி அணிந்து, பொலிவுடன் சிலை காணப்படுகிறது. அரை ஆடையும், கைகளில் காப்பும், வலது காலில் சிலம்புடன் காணப்படுகிறது. இது, 15ம் நுாற்றாண்டைச்சேர்ந்த நடுகல் என, தொல்லியல் உதவி கல்வெட்டாளர் நாகராஜன் மற்றும் உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இதேபோல் ஒரு நடுகல், மதுரை -சோழவந்தான் அருகே, தென்கரை கிராம மூலநாத சுவாமி கோவிலில் உள்ளது. அங்கு, ஆண்டுக்கு ஒரு முறை, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சென்று வழிபடுவதாக, வரலாற்று ஆசிரியர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த நடுகல், சாவாரங்கல் சமூகத்தினரின் காவல் தெய்வம் என கூறப்படுகிறது. துலுக்காணத்தம்மன் கோவில் வளாகத்தில், மற்றொரு வீரரின் நடுகல் உள்ளது. வலது கையில் வில்லேந்தி, வீரர் ஒருவர் போருக்கு செல்வதுபோல உள்ளது. இச்சிற்பம் சேதமடைந்து, உருவம் சரியாக தெரியாத நிலையில் உள்ளது. இச்சிலையை வணங்கினால் பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் நீங்குவதாக, இன்றும் மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகாமிசுந்தரி அம்மன் கோவில் ஐப்பசி பூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar