சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து, தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.