பதிவு செய்த நாள்
29
ஏப்
2022
08:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்தில் நடந்த பகவான் ரமணரின், 72வது மஹா ஆராதனை விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்தில், நேற்று, 72வது மஹா ஆராதனை விழா நடந்தது. பல வண்ண மலர்களால் அலங்கரித்த பகவான் ரமணரின் சன்னதியில், அதிகாலையில் மங்கள இசையுடன் விழா துவங்கியது. பின்னர் மஹன்யாச ருத்ர ஜபம், சிறப்பு பாராயணம், அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. தொடர்ந்து, 11:00 மணிக்கு, ஆரத்தியுடன் பகவானது, 72வது ஆராதனை விழா நடந்தது. இதில், திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, ரமணரின் கீர்த்தனைகளை பாடி வழிபட்டார். மேலும், இளையராஜாவின் மகனும் இசை அமைப்பாளருமான கார்த்திக் ராஜா உள்ளிட்ட பலர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.