சீர்காழியில் புற்றடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் .
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் பேச்சியம்மன், துர்க்கை, நாகர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இந்தக் கோவிலில் புற்றடி மாரியம்மன் பக்தர்கள் வேண்டியதை வேண்டிய மாத்திரத்திலேயே கொடுத்தருளும் மகா சக்தியாக எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் வேண்டுதலை முன்வைக்கும் பக்தர்கள் அவை நிறைவேறியதும் அம்பாளுக்கு மாவிளக்கு இட்டு நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதிப்பது வழக்கம். இத்தகைய சிறப்பு பெற்ற கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாவிசேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 26ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை ஏழாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து எட்டு மணிக்கு வேத மந்திரம் ஓத, மங்கல வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிஸ்ட்ரிக்ட் கோவிந்தராஜ், நாகராஜ் சுவாமிகள் செய்திருந்தனர். சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.