காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார்.இதனால் பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு 6.45மணிக்கு சசிகலா கோவிலுக்கு வருகை புரிந்தனர். இவரை கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தனர். பின்னர் சசிகலா ஆலயத்தில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர்.விநாயகர்,முருகன்,அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டார்.பின்னர் சசிகலா சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். முன்னதாக ஒன்பது எள்ளு தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆலயத்தைச் சுற்றி வந்த சசிகலா சுமார் 7.15மணிக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் கட்சிப் பிரமுகர்கள் சிலர் உடன் இருந்தனர்.