ஆர்.எஸ்.மங்கலம், :ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் சித்திரை விழா ஏப்.21ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அபிஷேகம், ஆராதனை, ஏப்.27ல் திருவிளக்கு பூஜை நடந்தன. விழாவின் கடைசி நாளான நேற்று சாத்தமங்கலம் கிராம எல்லையில் இருந்து கோயிலுக்கு பறவைக் காவடி, மயில் காவடி மற்றும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், ஊர்வலமாக சென்று கோயில் முன் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பூக்குழி உற்ஸவத்தை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு சென்ற பால் மூலம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. இதில் சாத்தமங்கலம், கூட்டாம்புளி, வரவணி உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.