பாறைபட்டி பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2022 01:05
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே பாறைபட்டி பேசும் கன்னிமார் கோயிலில் சித்திரை மாத சர்வ அமாவாசை வழிபாடு நடந்தது. உலக மக்கள் நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.முன்னதாக சித்திவிநாயகர், மந்தை கருப்புசாமி கோயிலை தொடர்ந்து ஏழு கன்னிமார் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.