விருத்தாசலம்:அமாவாசையொட்டி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. தென்கோட்டைவீதி மோகாம்பரி அம்மன், வேடப்பர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.