பதிவு செய்த நாள்
27
ஜூலை
2012
10:07
திருத்தணி : முருகன் கோவிலில், 28 நாட்களில், 51 லட்சம் ரொக்கம், அரை கிலோ தங்கம் மற்றும் ஐந்து கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். இவர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த மாதம், 28ம் தேதி முதல், இம்மாதம் 24ம் தேதி வரை, பக்தர்கள் அளித்த காணிக்கையை மலைக்கோவிலில் உள்ள, வள்ளி மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கவிதா முன்னிலையில் ஊழியர்களால் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 51.40 லட்சம் ரொக்கம், அரை கிலோ தங்கம் மற்றும் ஐந்து கிலோ வெள்ளி கிடைத்து உள்ளது. கடந்த மாத உண்டியல் வசூலை விட இம்மாதம், ஐந்து லட்சம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.